வவுனியா தரணிக்குளம் ஸ்கைபேட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் கிரிக்கெட் சுற்றுப்போட்டி!!

668

 
வவுனியா ஆசிகுளம் தரணிக்குளம் ஸ்கைபேட்ஸ் விளையாட்டுகழகத்தின் 15வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வுகள் நேற்றுமுன்தினம் (24.03.2018) கழக மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் உதயதாரகை மற்றும் செவ்வானம் அனியினர் மோதினர் இதன் வெற்றி சம்பியனாக செவ்வானம் அணியினர் தெரிவாகினர்.

இதன்போது வெற்றி அணிக்கு 14000 காசோலையும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டதுடன்,
இரண்டாவது அணிக்கு 6000 ரூபா காசோலையும் வெற்றி கிண்ணமும் வழங்கப்பட்டது. அத்துடன் சிறுவர் விளையாட்டுக்களும் நடைபெற்றதுடன் பரிசில்களும் வழங்கப்பட்டன.

இவ் விளையாட்டு நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், ஆசிகுள வட்டார பிரதேச சபை உறுப்பினர்கள், சமளங்குளம் வட்டார பிரதேச சபை உறுப்பினர், சிதப்பரபுரம் பொலிஸ் பொருப்பதிகாரி, அஸ்திரம் இளைஞர் கழக தலைவர் நா.ஸ்ரீதரன், தரணிகுள கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.