அஸ்வினியை கொன்ற அழகேசன் சிறையில் தற்கொலை முயற்சி?

1228

தமிழகத்தில் கல்லூரி மாணவி அஸ்வினியை கொலை செய்த அழகேசன் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சென்னை கேகே நகர் பகுதியில் உள்ள மீனாட்சி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் அஸ்வினி(19).

அவரை அழகேசன் என்ற நபர் கடந்த 9-ஆம் திகதியன்று கல்லூரி வாசலில் வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர கொலை சம்பவத்தை தொடர்ந்து அழகேசன் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

உயர் பாதுகாப்பு பகுதியில் உள்ள அறையில் அடைக்கப்பட்டிருந்த அழகேசன், நேற்றிரவு லுங்கியை கிழித்துக் கொண்டு இருந்த போது சிறைக்காவலர்கள் கண்களில் சிக்கியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த பொலிசார், ஏன் லுங்கியை கிழிக்கிறாய்? என அழகேசனிடம் கேட்டதற்கு அவர் மவுனமாக இருந்ததால் தற்கொலை முயற்சியா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே புழல் தான் சிறையில் நுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கில் கைதாகியிருந்த ராம்குமார், மின் வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.