அவளை நானே கொன்றுவிட்டேன் : மருத்துவமனையில் கதறிய காதலன்!!

1184

கேரளாவில் தனது மகள் தாழ்ந்த சாதி நபரை காதலித்து திருமணம் செய்துகொள்ளவிருந்ததால், அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த தந்தை கோபம் கொண்டு திருமணம் நடப்பதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பாக மகளை கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆதிரா என்ற பெண்ணும், இராணுவ வீரரான பிரிஜேஷ் என்பவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.

மணமகன் தரப்பில் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டாலும், மணமகளின் தந்தை வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்துள்ளார்.

தந்தை எதிர்த்தாலும் பரவாயில்லை, நாம் திருமணம் செய்துகொள்ளலாம் என இருவரும் முடிவு செய்தனர், திருமணக்கனவுகளுடன் கேரளா வந்த பிரிஜேஷ் தற்போது, மண்ணுக்குள் புதைந்து போன காதலை நினைத்து கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார்.

இறக்கை இன்றி வானில் பறக்கும் அளவிற்கு, மகிழ்ச்சியாக இருந்த காதல் ஜோடி வாழ்க்கையில், சாதி எனும் காலன் நுழைந்து அவர்களின் கனவை சிதைத்துவிட்டார்.

தனது காதலியின் பிரிவை தாங்கமுடியாமல் பிரிஜேஷ் கதறுவது பார்ப்பவர்களையும் கண்கலங்க வைக்கிறது.

மருத்துவமனையில், ஆதிரா அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவலை அறிந்து அங்கு சென்று அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

அவர், அங்கு பார்த்தது ஆதிராவை அல்லது அவளது சடலத்தை. அப்பவே, தனது அப்பாவின் வீட்டிற்கு போகமாட்டேன் என்று சொன்னாள். நான் தான் அவளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தேன், நானே அவளை கொன்னுட்டேனே என கதறி அழுதுள்ளார்.

ஆதிராவின் மரணத்தால், பிரிஜேஷ் உணவு சாப்பிடாமல், வாழ்க்கையை வெறுத்த நிலையில் இருக்கிறார்.