நீதிமன்றத்தில் சரணடைந்த பவர் ஸ்டார்!!

638

powerகாரில் போலி நம்பர் பிளேட் பொருத்திய வழக்கில் சிவகாசி நீதிமன்றத்தில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் நேற்று சரண் அடைந்தார்.

2009ம் ஆண்டில் போலி நம்பர் பிளேட் பொருத்திய காரில் பயணித்ததாக பவர் ஸ்டார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவுப்படி, சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் நேற்று காலை சரண் அடைந்தார்.