திக்வெல்ல மாத்தறை – கதிர்காமம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த விபத்தில் 48 வயதான சீன பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
வீதியில் நடந்து சென்ற பெண் மீது முச்சக்கர வண்டி ஒன்று மோதியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை, கதிர்காமம் ரயில்வே நிர்மாணிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சீன நாட்டவரின் மனைவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய 36 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டியின் பிரேக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், வீதி மாறிய சீன பெண் மீது எதிர்பாராத விதமான மோதியதாக பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சாரதி மாத்தறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.








