போராட்டத்தில் குதித்த புது மணப்பெண் சசிகலா புஷ்பா!!

619

தமிழக மாநிலங்களவை எம்பி சசிகலா புஷ்பா திருமணம் முடிந்த அடுத்த நாளே ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அம்மாவட்ட மக்கள் தொடர்ந்து 44வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் இருதரப்பினரும் கொளுத்தும் வெயிலைக் கூட பொருட்படுத்தாமல் கைக்குழந்தையுடன் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த எம்பி சசிகலா புஷ்பா நாடாளுமன்ற வளாகத்தில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான பதாகையை தாங்கியவாறு போராட்டத்தில் கல்ந்துகொண்டார்.

நச்சு வாயு உயிரைக் கொல்கிறது எனவே தமிழ் நாட்டில் இருந்து ஸ்டெர்லைட்டை தடை செய்ய வேண்டும் என அவர் தாங்கி இருந்த எதிர்ப்பு பதாகையில் எழுதப்பட்டிறுந்தது.

சசிகலா புஷ்பாவுக்கும் ராமசாமி என்பவருக்கும் நேற்று டெல்லியில் திருமணம் நடைபெற்ற நிலையில் இன்று அவர் போராட்டத்தில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.