ஆர்யாவுக்கு வலது காலில் சத்திரசிகிச்சை : வீட்டில் தங்கி ஓய்வெடுக்கிறார்!!

245

aryaநடிகர் விஷால் தலைமையிலான நட்சத்திர கிரிக்கெட் போட்டி கடந்த பிப்ரவரி மாதம் துபாய், சென்னை, பெங்களூர், ஐதராபாத், விசாகப்பட்டினம், கொச்சி ஆகிய இடங்களில் நடந்தது. அதில், நடிகர் ஆர்யாவும் கலந்து கொண்டு விளையாடினார்.

அப்போது அவருடைய காலில் பலத்த அடிபட்டது. அதற்காக, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளித்த வைத்தியர் அடிபட்ட காலில் சிறிய அளவில் சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து படப்பிடிப்புகள் இருந்ததால் ஆர்யாவினால் உடனடியாக சத்திரசிகிச்சை செய்து கொள்ள முடியவில்லை.

அவர் நடித்து வந்த ராஜாராணி படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. தீபாவளிக்கு ஆரம்பம் படம் வெளிவருகிறது அடுத்து அவர் நடித்த இரண்டாம் உலகம் படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இதைத்தொடர்ந்து ஆர்யாவுக்கு தற்போது ஓய்வு கிடைத்ததால், சென்னையில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை செய்து கொண்டார். அவருடைய வலது காலில் சத்திரசிகிச்சை நடந்தது. ஆர்யா இப்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இதுபற்றி ஆர்யா கூறியதாவது..

கிரிக்கெட் விளையாடியபோது என் காலில் அடிபட்டு தசை நார் கிழிந்து பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு சத்திரசிகிச்சை செய்து கொள்ளும்படி வைத்தியர்கள் கூறினார்கள். அதன்படி சத்திரசிகிச்சை செய்துகொண்டேன். சத்திரசிகிச்சைக்குப்பின், சில நாட்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்கள். படப்பிடிப்புகளை தள்ளிவைத்து விட்டு வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறேன் என்று ஆர்யா கூறினார்.