அஜித்தின் ஆரம்பம் படத்தை தடை செய்யக்கோரி நீதிமன்றதில் மனு!!

287

aarambamஅஜித், ஆர்யா, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ஆரம்பம் படம். இன்று ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் ஆரம்பம் படத்திற்கு தடைவிதிக்கக் கோரி சேலம் ரெட்டியூரைச் சேர்ந்த பிளாக் கிங்டம் பிக்சர்ஸ் சார்பில் கே.கண்ணன் என்பவர் நகர சிவில் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் இனிதான் ஆரம்பம் என்ற தலைப்பில் நான் ஒரு தமிழ் படத்தை தயாரித்து இயக்கி வருகிறேன். இப்படத்தின் பாடல் பதிவுகள் நடந்துவிட்டது. இந்த பெயரை தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் கில்டில் கடந்த ஏப்ரல் மாதம் 12ம் திகதி பதிவு செய்துள்ளேன்.

படத்தின் தயாரிப்பு பணிகள் நடந்துவரும் நிலையில் ஸ்ரீசத்ய சாய் மூவிஸ் சார்பில் ரகுராம் என்பவர் ஆரம்பம் என்ற பெயரில் திரைப்படம் தயாரித்து வெளியிடவுள்ளார். ஏற்கெனவே நான் பதிவு செய்த பெயரை விதிகளுக்கு முரணாக தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டில் பதிவு செய்துள்ளனர்.

எனவே, இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டில் பதிவு செய்த ஆரம்பம் என்ற பெயரை திரும்பப்பெற உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.