வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் பாவனைக்கு குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் இன்று(28.03) காலை 8 மணிக்கு காலை பிரார்த்தனையின் போது பாடசாலையின் முதல்வர் தா.அமிர்தலிங்கம் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது.
தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரும் முல்லைத்தீவு பிரதி நீர்ப்பாசனப்பணிப்பாளருமான ந.ஸ்ரீஸ்கந்தராசாவின் நிதி உதவியில் இரண்டாயிரம் லீற்றர் ஒருநாளைக்கு குடிநீர் பெற்றுக்கொள்ளக்கூடிய குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரத் தொகுதி ஆரம்பப்பிரிவு மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் சுத்தமான குடிநீர்தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாடசாலையின் உப அதிபர் க.முல்லைக்குமரன், ஆரம்பப்பிரிவு பிரதி அதிபர் திருமதி ஞானமதி மோகனதாஸ், பாடசாலையின் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.













