வவுனியாவில் தேன்கூடு கலைந்ததில் பாடசாலைக்கு விடுமுறை!!

999

 
வவுனியா ஈரப்பெரியகுளம் பரக்கும் மகாவித்தியாலயத்தில் இன்று (29.03) காலை பாடசாலை வளவிலிருந்த தேனிக்கூடு காற்றில் கலைந்ததில் பாடசாலை மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் பாடசலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெறவிருந்த பரீட்சை பிறிதொரு தினத்தில் நடாத்தப்படும் என்று வவுனியா தெற்கு கல்விப்பணிப்பாளர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தொயிவருகையில்,

இன்று காலை வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியிலுள்ள பரக்கும் மகாவித்தியாலயத்தில் காலை பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்தில் பாடசாலை வளவிலிருந்த தேன்கூடு ஒன்று காற்றினால் கலைந்துள்ளது.

இதன் காரணமாக பாடசாலைக்கு மாணவர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பாடசாலையின் அதிபர் இவ்விடயம் தொடர்பாக தெற்கு வலய கல்விப்பணிப்பாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து வவுனியா தெற்கு கல்வி வயலப்பணிப்பாளர் வீ.இராதாகிருஷ்ணனுடன் தொடர்புகொண்டபோது, பாடசாலையிலிருந்த தேன்கூடு காற்றினால் கலைந்துள்ளது இதையடுத்து மாணவர்களுக்கு எவ்விதப்பாதிப்புக்களும் ஏற்படாவண்ணம் இன்று பாடசலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெறவிருந்த முதலாம் தவணை பரீட்சையின் பாடத்தினை வேறு ஒரு தினத்தில் நடாத்தப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேன்கூடு கலைந்ததில் மாணவர்களுக்கு எவ்விதப்பாதிப்புக்களும் ஏற்படவில்லை தேன்கூட்டை அகற்றுவதற்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவினருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. எமது பணிமனையின் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர் என்று தெரிவித்தார்.