யாழில் 9A சித்தி பெற்ற மாணவன் உயிரோடு இல்லை : துயரம் தாங்க முடியாமல் சோகத்தில் குடும்பம்!!

441

சாவகச்சேரி மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்துக்கு அருகில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் பலியான மாணவன் வெளியாகியுள்ள க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சிறந்த முறையில் 9A சித்தி பெற்று சித்தியடைந்துள்ளார்.

குறித்த விபத்தில் பலியான 17 வயதுடைய கோனேஸ்வரன் காருசன் வெளியாகியுள்ள பரீட்சை முடிவுகளில் 9A சித்தியை பெற்றுள்ளமை அவருடைய குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் அந்த சந்தோசத்தை வெளிக்காட்டுவதற்கு காருசன் உயிரோடு இல்லையே என்ற துயரம்தான் அதிகம்.

க.பொ.த.சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியானமை குறிப்பிடத்தக்கது.