ஆனந்த சுதாகரனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு!!

435

தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் விடுதலையை கோரும் விடயத்தில் ஆனந்த சுதாகரனின் இரண்டு பிள்ளைகள் இன்று ஜனாதிபதி செயலாளரை சந்தித்துள்ளனர்.

ஜனாதிபதியின் செயலாளரை அவரது செயலகத்தில் வைத்து சந்தித்து ஆனந்த சுதாகரனின் விடுதலையினை வலியுறுத்தி மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.

இதன்போது, ஜனாதிபதிக்கு ஆனந்த சுதாகரனின் இரண்டு பிள்ளைகளும் நேரடியாக மகஜரினை ஒப்படைத்துள்ளனர்.

ஜனாதிபதியின் செயலாளர் மகஜரை பெற்றுக்கொண்டுள்ளதுடன், ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வதற்குரிய ஏற்பாடுகளை ஜனாதிபதி முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.