வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 15 மாணவர்கள் 9A சித்தி பெற்று சாதனை!!

1133

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 15 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

சிவேகா மகேந்திரன், சர்மிகா சர்வானந்தன், பிரணவி சிவகுமார், மயூரிகா சண்முகநாதன், தர்சிகா நடராஜா, விதுசா சிவகுருநாதன், வர்ஷாயினி அரவிந்தன், ஹரினி சபேசன், விஸ்ணுஜா லோகநாதன், பாத்திமா ரம்ஸீன், கிவிதா நகுலேஸ்வரன், அபினா தயாகரன், வானதி இளையதம்பி, பிரேமி செந்தில்குமரன், தாரண்யா சூரியகுமார் ஆகியோர் 9A சித்திகளை பெற்றுள்ளதுடன்

மாதுமை நந்தகுமார், வினுஜா திருவருட்செல்வன், நர்ஜிகா நகுலேஸ்வரன், கிறிஸ்ரிகா காசிநாதன், சப்திகா தயானந்தராஜா, மேரின்ஷா யூலியட் அன்ரனி, ஹிபா உபைத், அக்ஷயா சசிராஜ், அமிர்தவர்ஷினி, மதுரா பத்மராஜன் 8A,B சித்திகளையும் ஜானுஸா அழகேஸ்வரன் 8A, C சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.