வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் 4 மாணவிகள் 9A சித்தி!!

707

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் 4 மாணவிகள் 9A சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

ருகாசிகா சுபாகரன், அட்சயா தர்மகடாட்சம், சியானுகா செல்வரஞ்சன், விதுஷா விக்னேஸ்வரன் ஆகியோர் 9A சித்திகளை பெற்றுள்ளதுடன்,

கஜேந்தினி கணேசலிங்கம், சரணிகா செல்வச்சாமி, மயூரபி உதயகுமார், கிசாலினி இந்திரலிங்கம், பிரேதிகா சண்முகராஜ் , நிக்ஷா குமார், டிலக்சிகா கலைச்செல்வன் 8A,B சித்திகளையும்

தீபிகா ஜெகதீஸ்வரன், ஆரணி இராசவேல், லக்சனா சுரேசன், கம்சிகா தவக்குமார், பாத்திமா நிக்சா நிஷாம்டீன் 7A,2B சித்திகளையும் கர்சா அருணகுமார் 7A,B,C, துளசிகா ரவீந்திரமூர்த்தி 7A, 2C

திலக்சிகா தேவராஜன், கோசலா ராஜசேகரம், அபர்ணா சந்திரமோகன் 7A,2C சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.