தற்கொலைக்கு இவர்களே காரணம் : தூக்கில் தொங்கிய மாணவியின் உருக்கமான கடிதம்!!

1141

கேரளாவில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது.

பாலக்காட்டில் உள்ள ஆலத்தூரை சேர்ந்த மணிகண்டன் – சுனிதா தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இளைய மகள் அஸ்வதி (19) அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் திங்கள் காலை கல்லூரிக்கு செல்வதாக கூறி அஸ்வதி சென்றுள்ளார்.

பின்னர் மதியம் சுனிதா அஸ்வதிக்கு போன் செய்த போது அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை. இதையடுத்து கல்லூரிக்கு போன் செய்த போது அஸ்வதி கல்லூரிக்கே வரவில்லை என தெரியவந்தது. பின்னர் அவர் வீட்டுக்கு சென்றிருப்பார் என சுனிதா விட்டுவிட்டார்.

இதையடுத்து மாலை சுனிதா தனது வேலை முடிந்து வீட்டுக்கு வந்த போது மின்விசிறியில் அஸ்வதி சடலமாக தொங்கியபடி இருந்துள்ளார்.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சடலம் அருகிலிருந்த கடிதத்தை அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

அதில், என் தற்கொலைக்கு காரணம் தனது வகுப்பில் உள்ள 4 மாணவிகள் மற்றும் ஆசிரியை தான் என எழுதப்பட்டிருந்தது.

பொலிசார் கூறுகையில், காலை 10 மணிக்கே அஸ்வதி தூக்கில் தொங்கியிருப்பார் என எண்ணுகிறோம், மாலை 5 மணிக்கு தான் சுனிதா சடலத்தை பார்த்துள்ளார்.

அஸ்வதி தனது வகுப்பறையில் 5 முறை மயங்கி விழுந்துள்ளார், ஆனால் தனது உடல்நிலை குறித்து சக மாணவிகளிடமோ அல்லது ஆசிரியையிடமோ அவர் கூறியதில்லை என தெரிகிறது.

தற்கொலை கடிதம் தொடர்பான அறிக்கையை அதிகாரபூர்வமாக பொலிசார் இனி தான் வெளியிடவுள்ளனர்.