தந்தையின் சடலத்தை 8 கிலோ மீட்டர் தூரம் ரிக்‌ஷாவில் சுமந்து சென்ற மகன்!!

652

இந்தியாவில் இறந்த தந்தையின் உடலை, அவரது பிள்ளைகள் 8 கிலோ மீட்டர் தூரம் வரை ரிக்‌ஷாவில் இழுத்துச் சென்ற அவலம் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி பகுதியை சேர்ந்தவர் மன்ஷரம், இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த மன்ஷரமின் உடலை, வீட்டிற்கு கொண்டு செல்ல வாகன வசதி இல்லை.

இதனால், அவரின் மாற்றுத்திறனாளி மகனும், மகளும் ரிக்‌ஷா ஒன்றில் தந்தையின் உடலை வைத்து, சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் வரை கொண்டு சென்றுள்ளனர்.

வட இந்தியாவில், இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.