மகனுடன் சேர்ந்து 10 ஆம் வகுப்பு பரீட்சை எழுதும் அம்மா : சுவாரசிய சம்பவம்!!

359

இந்தியாவில் மகனுடன் சேர்ந்து அவரின் அம்மாவும் பத்தாம் வகுப்பு தேர்வை ஒன்றாக எழுதும் சுவாரசிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் மனைவி ரஜினி பாலா (44). பாலா கடந்த 1989-ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பு படித்த நிலையில் அதோடு படிப்பை நிறுத்தி விட்டார்.

பின்னர் மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் விட்டு போன படிப்பை முடிக்க முடிவு செய்த பாலா பத்தாம் வகுப்பு படிக்கும் தனது மகனுடன் பள்ளிக்கூடத்துக்கு சென்று ஒன்றாக படித்து வருகிறார்.

தற்போது தெரிவையும் மகனுடன் சேர்ந்து ஒன்றாக பாலா எழுதி வருகிறார். அவர் கூறுகையில், மீண்டும் படிப்பை தொடர்வது மகிழ்ச்சியாக உள்ளது.

என் கணவர் தான் இதற்கு ஊக்கம் கொடுத்தார், அவருக்கு என் நன்றிகள் என கூறியுள்ளார்.

ராஜ்குமார் கூறுகையில், பாலா தனது படிப்பை தொடர்வதோடு பட்டப்படிப்பை முடிக்க வேண்டும் என விரும்புவதாக கூறியுள்ளார்.