12 ஆண்டுகளாக பெற்ற மகனை கட்டிப்போட்ட தாய் : வெளிச்சத்திற்கு வந்த கொடூரம்!!

576

சீனாவில் வாய் பேச முடியாத, காது கேளாத மகனை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியுள்ள தாயின் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் யூ ரோங்(77) என்ற பெண்ணுக்கு மகனாக பிறந்தவர் வாங் ஜிக்கியங்(41), பிறவியிலேயே பேசும் ஆற்றல் மற்றும் காது கேட்கும் திறனை இழந்தவர்.

அவரை சிறு வயதில் படிப்பிற்காக மாற்றுத் திறனாளிகளுக்கான போர்டிங் பள்ளியில் சேர்த்துள்ளனர். அங்கு வாங்கை அவரது நண்பர்கள் கேலி செய்ததால் மன அழுத்தம் ஏற்பட்டு நாளடைவில் நோயாக மாறியுள்ளது.

மனநோயால் பாதிக்கப்பட்ட மகனுக்கு சிகிச்சை வழங்காமல் அவரை சங்கிலியால் கட்டி அடைத்து வைக்க முடிவு செய்துள்ளார் தாய், யூ ரோங்.

அதன்படி தன் வீட்டருகே சிறிய கூடம் ஒன்றை கட்டி, அதில் தன் மகனை சங்கிலியால் கட்டி வைத்து சித்ரவதை செய்துள்ளார்.

திட்டத்தட்ட 12 ஆண்டுகளாக ஒரே இடத்தில் கட்டப்பட்டு கிடக்கும் தன் சகோதரனை பார்ப்பதற்கு வேதனையாக இருப்பதாக வாங்கின் சகோதரி ஷுஃபன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது தாய் கூறுகையில், “என் கணவர் உயிரோடு இருந்தவரை அவனை பத்திரமாக கண்காணித்து வந்தார். அவரின் மறைவிற்கு பின் என்னால் தனியாக பார்த்துக் கொள்ள முடியாமல் அடைத்து வைத்தேன்” என கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, குறித்த நபரின் சிகிச்சைக்கு உரிய பணத்தை வழங்க முயற்சிப்பதாக அரசியல் பிரமுகர் டிங் தெரிவித்துள்ளார்.