தெஹிவளையில் 18 சிறுமிகளுக்கு நடந்த கொடுமை!!

281

தெஹிவளை பிரதேசத்திலுள்ள சிறுவர் இல்லத்தில் 18 சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறுவர் இல்லத்தின் பொறுப்பாளரின் கணவரால் குறித்த சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் வழங்கிய உத்தரவிற்கமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் ஆரம்பக்கட்ட விசாரணைக்கமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சிறுவர் இல்லத்தில் சாரதியாக செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன், அவருக்கு எதிரான மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.