முல்லைத்தீவில் திருமணமான இரண்டே மாதத்தில் இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

276

முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குறித்த பகுதியை சேர்ந்த திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு வற்றாப்பளை வீதியில் கடந்த 27.03.2018 அன்று கேப்பாபுலவில் இருந்து அதிக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி மதிலுடன் மோதுண்டுள்ளது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இவர் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சூரிபுரம் கேப்பாபுலவை சேர்ந்த 20 வயதுடைய சண்முகலிங்கம் நிமலன் என்ற திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன இளைஞனே பலியாகியுள்ளார்.

மேலும் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.