நடுரோட்டில் கணவன் கண்முன்னால் குத்திக் கொல்லப்பட்ட மனைவி!!

454

இந்தியாவில் இளம் பெண் ஒருவர் மார்க்கெட்டில் கணவர் கண் முன்னால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லியின் கோவிந்தபுரி பகுதியை சேர்ந்த உமேஷ் துபி என்பவர் தனது மனைவி சுமன் (26) என்பவருடன் அங்குள்ள மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த அஜய் (23) மற்றும் பிஜேந்தர் (24) என்ற இரு இளைஞர்கள் சுமனை உரசியபடி நின்று அவரிடம் சில்மிஷம் செய்துள்ளனர். இதை பார்த்து கோபமடைந்த உமேஷ் அவர்களை தட்டிகேட்ட நிலையில் இருவரும் அங்கிருந்து சென்றுள்ளனர்.

பின்னர் மார்க்கெட்டிலிருந்து வெளியில் வந்து சாலையில் சுமனும், உமேஷும் சென்று கொண்டிருந்த போது மீண்டும் அவர்களை கத்தியுடன் அஜய் மற்றும் பிஜேந்தர் வழிமறித்துள்ளனர்.

பின்னர் உமேஷ் மீது லேசாக கத்தியால் வெட்டியுள்ளார், இதை பார்த்து கணவரை பாதுகாக்க சென்ற சுமனை இருவரும் கத்தியால் குத்தினார்கள். இதையடுத்து கணவர் கண் எதிரிலேயே ரத்த வெள்ளத்தில் சுமன் கீழே சரிந்தார்.

இதன்பின்னர் சுமன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டத்தை மருத்துவர்கள் உறுதி செய்தனர். சிறிய அளவில் காயம்பட்ட உமேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவத்தில் ஈடுபட்ட அஜய் மற்றும் பிஜேந்திரை பொதுமக்கள் அடித்து உதைத்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். இருவர் மீதும் ஏற்கனவே திருட்டு வழக்கு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.