விஜய் மல்லையாவுடன் சேர்ந்து லண்டனுக்கு ஓடிய 3வது காதலி!!

920

கிங்பிஷர் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா (62). இவர் இந்திய வங்கிகளில் தன்னுடைய விமான நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்காக ₹9,000 கோடி கடன் வாங்கினார்.

ஆனால், அதை முறையாக செலுத்தாத காரணத்தால், இவர் மீது வழக்கு தொடரப்பட்டதையடுத்து லண்டனில் தஞ்சம் அடைந்தர்ர்.

வங்கிகளில் பணத்தைத் திரும்பச் செலுத்தாமல் பண மோசடியில் ஈடுபட்டுள்ள விஜய் மல்லையா, சட்டரீதியான சவால்களைச் சந்தித்துவரும் சூழலில், தற்போது மூன்றாவதாக பிங்கி என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

யார் இந்த பிங்கி லால்வாணி

விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங் பிஷர் விமான நிறுவனத்தில், விமான பணிப்பெண்ணாக பிங்கி வேலை பார்த்து வந்துள்ளார். அதோடு, இவர் விஜய் மல்லையாவின் நெருங்கிய தோழியும் ஆவார். கிங் பிஷரின் சில விளம்பரப்படங்களிலும் இவர் தோன்றியுள்ளார்.

பிங்கி, விஜய் மல்லையாவின் கனவு தேவதை ஆவார். கடந்த 3 ஆண்டுகளாக மல்லையாவுடன் நெருங்கிய உறவில் இருந்த பிங்கி, கடன் பிரச்சனையால் 2016 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் திகதி லண்டனுக்கு ஓடியபோது,, அவருடன் சேர்ந்து பிங்கியும் சென்றார்.

அங்கு, லண்டனில் இருவரும் டேட்டிங்கில் இருந்துள்ளனர். தனது கடன் பிரச்சனை தொடர்பான விசாரணைக்கு லண்டன் நீதிமன்றத்தில் ஆஜராகும்போதெல்லாம், கூடவே பிங்கியும் செல்வார்.

சமீபத்தில் தான் இவர்கள் இருவரும் சேர்ந்து 3 காதல் நிறைவு தினத்தை கொண்டாடியுள்ளனர். தற்போது, இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர்.

விஜய் மல்லையாவின் முதல் மனைவி சமீராவும் விமான பணிப்பெண் என்பது குறிப்பிடத்தக்கது. 1986 ஆம் ஆண்டு சமீராவை திருமணம் செய்துகொண்டார், 1987 ஆம் ஆண்டு இவர்களுக்கு சித்தார்த் மல்லையா என்ற மகன் பிறந்தார்.

அதன் பின்னர், சமீராவை விவாகரத்து செய்தார். பின்னர், 1993 ஆம் ஆண்டு தனது பள்ளித்தோழியா ரேகா என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார். ரேகா ஏற்கனவே விவாகரத்து ஆகி 2 குழந்தைகளுக்கு தாயும் ஆவார்.

அதன்பின்னர், சில ஆண்டுகள் கழித்து ரேகாவை விட்டு பிரிந்தார். தற்போது, 3 வயது காதலியும் கிடைத்துள்ளார்.