எம்பி மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்த கணவர்!!

376

ஈரோடு மாவட்டத்தில் எம்பி சத்தியபாமாவை அவரது கணவர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சத்தியபாமாவிற்கும், அவரது கணவர் வாசுவிற்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே பிரச்சனை இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியாக பிரிந்து வாழத் தொடங்கினர்.

இருப்பினும் சொத்து தகராறு இருந்து வந்த நிலையில், நேற்று சத்தியபாமாவின் வீட்டுக்கு சென்றுள்ளார் வாசு.

அங்கே வீட்டுக்கு வெளியே சத்தியபாமாவின் தம்பி பிரபு நின்றிருக்க, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது.

“உன்னால் தான் இதெல்லாம் நடந்தது” என கடும் கோபத்துடன், தாக்க முயன்றுள்ளார், இதை தடுக்க முயன்ற சத்தியபாமா மற்றும் அவரது மகனையும் தாக்க முயன்றுள்ளார்.

இந்நிலையில் இன்று பிரபு அளித்த புகாரின் பேரில், பொலிசார் வாசுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று சத்தியபாமாவின் மகனுக்கு நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்த நிலையில், தன்னை அழைக்காததால் வாசு கோபமடைந்து இவ்வாறு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.