அமெரிக்கா செல்ல விரும்பும் இலங்கையர்கள் உட்பட அனைவருக்கும் புதிய நடைமுறை!!

1000

இலங்கையர்கள் உட்பட உலகின் அனைத்து நாட்டவர்களும் அமெரிக்கா விசா பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விசாவுக்கு விண்ணப்பிக்கும் அனைவரும் சமூக வலைத்தளங்களுடன் தொடர்பு வைத்திருத்தல் அவசியம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

சுமார் 5 வருடங்கள் சமூக வலைத்தளங்கள் ஊடான இந்த தொடர்ப்பு நீடித்திருக்க வேண்டும் என அமெரிக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கா நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு நுழையும் சிலர் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக அமெரிக்க FBI அதிகாரிகள் மேற்கொண்டுள்ள விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனவே பாதுகாப்பு கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புதிய சட்டத்திட்டங்களுக்கமைய விசா விண்ணப்பிப்பவர்கள் சமூக வலைத்தளங்களுடன் தொடர்பு வைத்திருப்பதற்கான தகவல் மற்றும் பெயர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.