இளைஞனுக்கு நடந்த விபரீதம் : ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பரிதாபம்!!

299

வயலை பார்ப்பதற்கு குதிரையில் சென்ற இளைஞரை சாதி வெறிப்பிடித்த கும்பல் ஒன்று வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள டிம்பி (Timbi) எனும் கிராமத்தை சேர்ந்தவர் கலு ரத்தோட், இவருக்கு 21 வயதுள்ள பிரதீப் ரத்தோட் என்ற மகன் உள்ளார்.

இவர்களுக்கு விவசாய நிலங்கள் நிறைய உள்ளது. அந்த வயல்களை பார்ப்பதற்கு தினமும் நடந்து செல்லும் பிரதீப்பிற்கு பக்கத்து ஊர்களில் குதிரை மீது செல்பவர்களை பார்த்து குதிரை மீது செல்ல ஆசை ஏற்பட்டது.

அதனால் கடந்த மாதம் சொந்தமாக ஒரு குதிரையை வாங்கிய பிரதீப், அதிலிருந்து வயலை பார்ப்பதற்கு எப்போதும் குதிரையில் சென்றுள்ளார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்து வயல்காரர்கள், பிரதீப் தலித் வகுப்பை சேர்ந்தவர் என்பதால், இனி இந்த மாதிரி குதிரையில் வருவதை பார்த்தால், அவ்வளவு தான் ஒழுங்காக குதிரையை விற்று விட்டு நடந்து போ என்று மிரட்டியுள்ளனர்.

ஆனால் அவர்கள் சொல்வதை கேட்காமல் வழக்கம் போல பிரதீப் குதிரையில் வயலுக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் பிரதீப் வயலுக்கு அருகில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இந்த படுகொலையை கண்டித்து பிரதீப்பின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையறிந்த பொலிஸார்கள் வழக்கு பதிவு செய்து, பிரதீப்பின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தியதில் வேறு ஜாதியை சேர்ந்த 3 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த விசாரணையில், இவ்வழக்கை வேறு கோணத்திலும் விசாரித்து வருகிறோம், காதல் பிரச்சனை காரணமாகவும் பிரதீப் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.