தீக்குளித்த தொண்டர் : மேடையில் கண்ணீர் விட்டு வைகோ உருக்கம்!!

784

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து அதன் ஆபத்துகளைப் பற்றி மக்களிடம் விழிப்பு உணர்வு பிரசாரம் செய்யும் வகையில், தேனி மாவட்டம் கம்பம் வரை செல்லும் நடைப்பயணத்தை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இன்று மதுரை பழங்காநத்தத்தில் தொடங்கினார்.

காலை 9 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடைப்பயணத்தைத் தொடங்கி வைக்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வருகை தந்திருந்தார்.

திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன், முத்தரசன், கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா, தெகலான் பாகவி, கௌதமன் உட்பட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் நடைப்பயணம் தொடங்க இருந்த இடத்தில் சிவகாசி ரவி என்பவர் திடீரென தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் பின்னர் மேடையில் கண்ணீர் மல்க பேசிய வைகோ, தொண்டரை காப்பாற்று இயற்கை தாயே என உருக்கமாக தெரிவித்தார்.

மேலும் நினைத்து பார்க்கவே முடியாத சோகமான நிகழ்வு என்றும், யாரும் தீக்குளிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.