சித்தப்பாவை திருமணம் செய்துகொண்ட மகள் : எதிர்ப்பு தெரிவித்த தந்தை அடித்துக்கொலை!!

350

திருநெல்வேலி மாவட்டத்தில் உறவுமுறை மீறி தனது மகள் திருமணம் செய்துகொண்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

சங்கரன் கோவிலை சேர்ந்த தங்கதுரை-மரியசெல்வி தம்பதியினருக்கு ஜெயந்தி என்ற மகள் உள்ளார். இவர் அங்கிருக்கும் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஜெயந்தி தனது கிராமத்தை சேர்ந்த திவாகரன் என்பவரை காதலித்து வந்துள்ளார். பிரபாகரன் ஜெயந்திக்கு சித்தப்பா முறை ஆவார். இதனால், மகளின் காதலுக்கு தங்கை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால், தாய் மரியசெல்வியின் ஆதரவுடன் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் ஜெயந்தியை, திவாகரன் திருமணம் செய்துகொண்டார். இந்த விவகாரத்தில், மரியசெல்விக்குக்கும் அவரது கணவருக்கும் தொடர்ந்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்று தனது வீட்டின் வாசலில் அமர்ந்துகொண்டிருந்த தங்கதுரையை அவரது மருமகன் திவாகரன் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த தங்கதுரையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் காலம் தாழ்த்தி, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். குடும்பத்தினரே தங்கதுரையை அடித்துக்கொலை செய்துவிட்டனர், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருகில் வசிப்பவர்கள் பொலிசில் புகார் தெரிவித்துள்ளனர். பொலிசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.