வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பரிதாபமாகப் பலி!!

969

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று (01.04.2018) அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் கிளிநொச்சி பகுதியினை சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில் ,

வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிலில் பயணித்த கிளிநொச்சி பகுதியினை சேர்ந்த 22வயதுடைய சாந்தவேலு ரோகான் என்ற இளைஞர் புளியங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கில் மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்துக்கு அதிகவேகம் அல்லது நித்திரை தூக்கம் காரணமாக இருக்கலாம் எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.