வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கேரள கஞ்சாவுடன் இரு பெண்களை வவுனியா பொலிஸார் நேற்று (31.03.2018) இரவு 9.30 மணியளவில் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து மொனராகல நோக்கி பேரூந்தில் கேரள கஞ்சா கடத்துவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள பேரூந்து தரிப்பிடத்தில் வைத்து குறித்த பேரூந்தினை பொலிஸார் சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.
இதன் போது இரண்டு கிலோ கேரள கஞ்சாவினை வைத்திருந்த அரலங்கவில பகுதியினை சேர்ந்த காஞ்சன சஞ்ஜிவனி (வயது 25) , காசினி மதுமாலி (வயது 26) ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் மீது இவ்வாறான முறைப்பாடுகள் முன்னரும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.






