வவுனியாவில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்கள் சத்தியப்பிரமாணம்!!

1470

 
தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களிற்கான, சத்தியபிரமாண நிகழ்வு நேற்று (31.03.2018) இடம்பெற்றது.

வவுனியா வாடி வீட்டில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் க.அருந்தவராஜா தலைமைதாங்கினார்.

இந்நிகழ்வின் போது, வவுனியா, மன்னார், முல்லைத்தீவில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 25 உறுப்பினர்கள் சட்டத்தரணி முன்பாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இதன்போது ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான இந்திரராசா, தியகராஜா, தமிழர் விடுதலை கூட்டணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர், ஈழவர் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர் செந்தில் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.