சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து கொலை செய்த 10 வயது சிறுவர்கள்!!

782

அசாம் மாநிலத்தில் வீட்டில் தனியாக இருந்த பத்து வயது சிறுமியை இரு சிறுவர்கள் உள்பட 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற கொடூரம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதில் தொடர்புடைய இரு சிறுவர்களையும் பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

நகான் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது ஜாகிர் உசேன் என்ற இளைஞர் வீட்டில் புகுந்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அந்த சமயம் பள்ளி முடிந்து அவ்வழியாக சென்ற 10 வயது நிரம்பிய சிறுவர்கள் இருவரும் ஜாகிருடன் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு சிறுமியை தீ வைத்து எரித்து கொன்றுள்ளனர்.

கடுமையான தீக்காயத்துடன் உயிருக்குப் போராடிய அந்த சிறுமி நேற்றிரவு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடிவந்த பொலிஸார் இரு சிறுவர்களை பிடித்து கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஜாகிர் உசேனை தேடி வருகின்றனர்.