16 நாட்களே ஆன பிஞ்சுக் குழந்தையின் உயிரைப் பறித்த குரங்கு!!

555

ஒடிசாவில் உள்ள கட்டாக் மாவட்டத்தில் பிறந்து 16 நாளே ஆன குழந்தை ஒன்று நேற்று மாலை 6 மணி அளவில் வீட்டில் தனது அம்மாவுடன் தூங்கிக் கொண்டிருந்தது.

அந்நேரம் வீட்டின் உள்ளே நுழைந்த குரங்கு குழந்தையை தூக்கிக் கொண்டு காட்டிற்குள் ஓடிவிட்டது.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்த பின்னர் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினரும், வனத்துறை அதிகாரிகளும் காட்டுப் பகுதிகளில் குழந்தையை தேடி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்காக மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை உயர் அதிகாரி ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதையடுத்து 30 மீட்புப்படையினர் இரவெல்லாம் காட்டில் தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில், கிராமத்தில் கிணறு ஒன்றில் இருந்து 16 நாள் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குழந்தையின் உடல் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குரங்குகளின் அட்டகாசத்தைக் குறைக்க ஏற்கெனவே புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையே குழந்தையை குரங்கு தூக்கிச் சென்றதா? இல்லை வேறு யாரேனும் காரணமா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.