16 வயதுச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை!!

1072

தமிழ்நாட்டில் 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் அருகில் உள்ள பரதூர் கிராமத்தை சேர்ந்த மணிமாறனின் மகள் வைத்தீஸ்வரி (16).

இவர் அங்குள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த ஞாயிறு வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார்.

பின்னர் வைத்தீஸ்வரி வீடு திரும்பவில்லை, இது குறித்து அவரின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர்.

இதனிடையில் இன்று காலை வைத்தீஸ்வரி ஊருக்கு வெளியில் இருந்த வயலில் சடலமாக கிடந்தார்.

வைத்தீஸ்வரி சடலத்தை கைப்பற்றிய பொலிசார் மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், அவர் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது கும்பல் ஒன்று அவரை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் மூன்று பேர் வைத்தீஸ்வரியை பலாத்காரம் செய்ததாக அவர் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த பொலிசார் இது தொடர்பாக நான்கு பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.