வவுனியா பிரமனாலங்குளத்தில் நேற்றிரவு (03.04) மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார்.
வவுனியா பிரமனாலங்குளம் வடகாட்டை சேர்ந்த பெரியசாமி முத்துலிங்கம் வயது (59) என்ற விவசாயியே மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார்.
குறித்த நபர் வடகாடு பிரதேசத்தில் விவசாயம் செய்து வரும் நிலையில் காட்டு மிருகங்களிடமிருந்து தனது பயிர்களை பாதுகாக்கும் பொருட்டு சட்டவிரோதமாக மின்சார வேலியமைத்து பயிர்களை பாதுகாத்து வந்த நிலையில் நேற்று இரவு காவலுக்கு சென்ற போது தவறுதலாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை பூவரசங்குளம் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.