வவுனியாவில் ‘போதையிலிருந்து விடுபட்ட வன்னி’ : போதைத் தவிர்ப்பு வேலைத்திட்டம்!!

303

ஜனாதிபதியின் செயல்திட்டமான மது போதைத் தவிர்ப்பு வேலைத்திட்டம் இலங்கையில் முதல் முதலாக வவுனியாவில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் காரியலயத்தின் ஏற்பாட்டில் இன்று (04.04) வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

‘போதையிலிருந்து விடுபட்ட வன்னி’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வானது கல்லூரியின் அதிபர் தா.அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

வவுனியாவிலுள்ள 37 பாடசாலைகளை சேர்ந்த சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் 420 பேர் போதை தவிர்ப்பு வேலைத்திட்ட நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததுடன், போதைப்பொருள் பாவனை தொடர்பாக முறையிடுவதற்கு அல்லது தகவல்களை பொலிசாருக்கு வழங்குவதற்கு ஒவ்வோரு பாடசாலையிலும் வைப்பதற்காக மாணவர்களிடம் முறைப்பாட்டு பெட்டிகள் பொலிசாரால் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலய மாணவிகளின் நடன நிகழ்வுகளும் நடைபெற்றிருந்தது.

மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் உதவி ஆய்வாளர் எஸ்.எம். பிரேமரத்தின வளவாளராக கலந்து கொண்டு மது போதை தவிர்ப்பு வேலைத்திட்டம் தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கமளித்திருந்தார்.

விருந்தினர்களாக வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், பொலிஸ் அத்தியட்சகர் ரி.எம்.எஸ்.தென்னக்கோன், வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மகிந்த வில்வ ஆராட்சி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.