வன்னி மாவட்டத்தில் 14514 பேர் போதைக்கு அடிமையானவர்கள்!!

641

வன்னி மாவட்டத்தில் 2017 ஆம் ஆண்டு மாத்திரம் 14 ஆயிரத்து 514 பேர் போதைக்கு அடிமையாகியுள்ளதாக வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

‘போதையிலிருந்து விடுபட்ட வன்னி’ எனும் தொனிப்பொருளில் நேற்று (04.04) வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர்..

கடந்த 2017 ஆம் ஆண்டு வவுனியாவில் 7355 நபர்களும், மன்னார் மாவட்டத்தில் 7159 நபர்களும் போதைக்கு அடிமையானவர்களாக இனங்காணப்பட்டுள்ளபோதும், வவுனியாவில் 158 பேரும் மன்னாரில் 82 பேர் மாத்திரமே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

அதனால் பொலிஸ் அறிக்கையின் பிரகாரம் இனங்காணப்பட்ட போதைக்கு அடிமையான நபர்களுக்கு எதிர்வரும் யூலை மாதத்திலிருந்து புனர்வாழ்வு அழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அத்துடன் எதிர்காலத்தில் வன்னி மாவட்டத்தில் சட்டவிரோத மது மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் கைது செய்யப்படுவார்கள்.

ஜனாதிபதியின் செயற்திட்டத்திற்கு அமைவாக வன்னியை மாணவர்களின் உதவியுடன் மது போதையற்ற பிரதேசமாக மாற்றுவோம் என தெரிவித்தார்.