வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

575

யாழ்ப்பாணத்திலிருந்து பொத்துவில் நோக்கி கேரள கஞ்சாவினை கடத்திச் சென்றவரை வவுனியா பொலிஸார் இன்று (05.04) அதிகாலை 4 மணியளவில் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் – பொத்துவில் பேருந்தை நொச்சிமோட்டை பகுதியில் வழிமறித்து சோதனை மேற்கொண்ட போது அப் பேருந்தில் பயணித்த காத்தான்குடியை சேர்ந்த 51வயதுடைய நபரை 2கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.