வவுனியா கூமாங்குளம் பொதுநோக்கு மண்டப கட்டிடத் திறப்புவிழா!!

539

கூமாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினதும் மக்களினதும் வேண்டுகோளிற்கு அமைவாக வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா 2017ம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூபா 17,00 000 பெறுமதியான இப்பொது நோக்கு மண்டப கட்டிடமானது கட்டப்பட்டு நேற்று (07.04.2018) கூமாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் மா.புஸ்பராசா தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.

இத்திறப்பு விழா வைபவத்தில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக திருமதி.சுகந்தி கிஷோர் (செலாளர் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை) எஸ்.ஸ்ரீநிவாசன் (மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் வவுனியா) திருமதி ஆர்.சுகனிக்கா கிராம அலுவலர் கூமாங்குளம் மற்றும் பொது அமைப்புக்களைச் சேர்ந்த தலைவர் செயலாளர் உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.