காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி இன்று திண்டிவனத்தில் நடந்த போராட்டத்தில் மின்சாரம் தாக்கி நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கடந்த சில நாட்களாக தமிழகமெங்கும் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில் இன்று திண்டிவனம் ரயில் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர், சென்னையில் இருந்து வந்த குருவாயூர் விரைவு ரயிலை மறித்து போராடினர்.
அப்போது, ரஞ்சித் என்பவர் ரயில் மீது ஏறி முழக்கமிட்டபடியே நடந்து சென்றுள்ளார். உணர்ச்சி மிகுதியில் மேலே இருந்த உயர் அழுத்த மின்கம்பியை உரசியதில், மின்சாரம் பாய்ந்து அவர் உடனடியாக தூக்கி வீசப்பட்டார்.
உடல் முழுவதும் கருகிய நிலையில் ரஞ்சித்துக்கு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை வழங்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.






