சிறுமி ஹாசினி கொலை வழக்கு : தூக்கு தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் மேல் முறையீடு!!

630

சிறுமி ஹாசினி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற தஷ்வந்த் தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

சென்னையை சேர்ந்த ஹாசினி (6) என்ற சிறுமி கடந்தாண்டு தஷ்வந்த் (24) என்ற இளைஞரால் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். இதையடுத்து தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றம் அதை ரத்து செய்தது.

பின்னர் வெளியில் வந்த தஷ்வந்த் தாயை கொலை செய்துவிட்டு தப்பியோடினான். இதையடுத்து மும்பையில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் மீது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில் தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் தூக்கு தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதற்கு 4 வாரங்களில் காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.