கேரளாவைச் சேர்ந்த நபர் சார்ஜாவில் மெக்கானிக்காக பணிபுரிந்து வரும் நிலையில் லொட்டரி பரிசு மூலம் ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.
பிண்டோ பால் தோமன்னா (36) என்பவர் சார்ஜாவில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவர் ஓன்லைனில் லொட்டரி சீட்டு ஒன்றை வாங்கிய நிலையில் அதற்கு 10 லட்சம் டொலர்கள் ஜக்பாட் பரிசு விழுந்துள்ளது. தனக்கு கிடைத்த பரிசுத்தொகையை தனது நண்பர் பிரான்சிஸ் சபாஸ்டினுடன் பகிர்ந்து கொள்வதாக தோமன்னா தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், துபாய் டுயிட்டி ஃப்ரீக்கு நன்றி. இந்த பரிசுத்தொகை எங்கள் இருவரின் வாழ்க்கையை மாற்றி விட்டது என கூறியுள்ளார்.
துபாய் டுயிட்டி ஃப்ரீ டிரா நிகழ்ச்சியானது 1999ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரை 127 இந்தியர்கள் இதன் மூலம் ஜக்பாட் பரிசு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






