வவுனியாவில் பெருந்தொகையான கள்ள நோட்டுக்கள் மீட்பு!!

1077

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த பயணிடம் இருந்து பெருந்தொகை கள்ள நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நேற்று (11.04.2018) மாலை 07.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது

குறித்த பயணியிடம் இருந்து 1000 ரூபாய் பணத்தாள்கள் 45, மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் 35 வயதான அலவ பிரசேத்தை சேர்ந்த பிரியந்த சமரசேகர எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் போலி பணம் அச்சிடும் மோசடியாளர்களிடம் இருந்து இந்த சந்தேகம் நபர் பணம் பெற்று செல்வதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. அதற்கமைய பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.