ராம்குமார் உடலில் 12 இடங்களில் மின்சாரம் பாய்ந்துள்ளது : அதிர்ச்சித் தகவல்கள்!!

622

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இறந்துபோன ராம்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கை தற்போது அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவர்களின் முன்னிலையில் ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவும் எடுக்கப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை ராம்குமாரின் பெற்றோர் மற்றும் அவரது வழக்கறிஞரிடம் கொடுக்கப்படாமல் அதிகாரிகளின் கைவசமே இருந்தது.

ராம்குமார் இறந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது பிரேத பரிசோதனை அறிக்கை பெற்றோரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில், ராம்குமாரின் உடலில் 12 இடங்களில் மின்சாரம் பாய்ந்திருப்பதற்கான காயங்கள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

நாடி, கழுத்து, வாயில் 2 இடங்கள், வலது கன்னத்தில் 2 இடங்கள், இடது மார்பில் 4 இடங்கள், இடது கையில் 2 இடங்களில் என மொத்தம் 12 இடங்களில் மின்சாரம் பாய்ந்துள்ளது’ என தெரியவந்துள்ளது.