ஆஷிபாவை கொன்றது சரிதான் என பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவரை தேடி வருகிறார்கள்.
ஜம்மு – காஷ்மீரை சேர்ந்த 8 வயது சிறுமி ஆஷிபா எட்டு பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்மந்தமாக கேரளாவின் பலரிவடோமை சேர்ந்த கோடாக் மகேந்திரா தனியார் வங்கி துணை மேலாளரான விஷ்ணு நந்தகுமார் பேஸ்புக்கில் ஒரு பதிவை எழுதியிருந்தார். அதில், இந்த வயதிலேயே ஆஷிபா கொல்லப்பட்டது நல்லது தான், இல்லையென்றால் அவள் வளர்ந்து இந்தியாவுக்கு எதிராக மனித வெடிகுண்டாக வருங்காலத்தில் வந்திருப்பார் என பதிவிட்டிருந்தார்.
இதற்கு கடும் கண்டணங்கள் எழுந்த நிலையில் மேலாளர் பதவியிலிருந்து விஷ்ணுவை பணி நீக்கம் செய்ய கோரிக்கை எழுந்தது. இதையடுத்து விஷ்ணு தனது பணியை திறம்பட செய்யவில்லை என கூறப்பட்டு அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் நந்தகுமாரின் மகன் தான் விஷ்ணு என தெரியவந்துள்ளது. இதையடுத்து பொலிசார் விஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் விஷ்ணு தலைமறைவாக உள்ளதால் அவரை பொலிசார் தேடி வருகிறார்கள்.







