வவுனியா வடக்கு பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது!!

945

வவுனியா வவுனியா வடக்கு பிரதேச சபையின் தலைவராக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ச.தனிகாசலம் தெரிவாகியுள்ளார். இன்று (17.04.2018)காலை 10 மணியளவில் நெடுங்கேணியில் அமைந்துள்ள பிரதேசசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்ற அமர்வில்,

வவுனியா வடக்கு பிரதேச சபை தலைவர் பதவிக்கு ச.தணிகாசலம் (தமிழரசுக்கட்சி) ஜெ.ஜெயரூபன் (தமிழர் விடுதலைக் கூட்டணி) போட்டியிட்ட நிலையில் இருவரும் சமமான வாக்குகளை பெற்றமையால் திருவுலச்சீட்டின் மூலம் ச.தணிகாசலம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை உபதலைவருக்காக போட்டியிட்ட நா.யோகராசா (தமிழரசுக்கட்சி) காமினி விக்கிரம்பால (பொதுஜன பெரமுன) ஆகியோரில் நா.யோகராசா வெற்றியீட்டியுள்ளார் இதன்மூலம் வவுனியா வடக்கு பிரதேசசபையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முழுமையாக கைப்பற்றியுள்ளது.

கடும் போட்டிக்கு மத்தியில் தவிசாளர் பதவிக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இடம்பெற்ற பகிரங்க வாக்கெடுப்பில் இரு தரப்பினருக்கும் சமமான 11வாக்குகள் வழங்கப்பட்ட நிலையில் திருவுளச்சீட்டின் மூலம் குழுக்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சதாசிவம் வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

உபதவிசாளர் பதவியிற்கு பொதுஜன பெரமுன மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் இடம்பெற்ற பகிரங்க வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு 14 வாக்குகளும் பொதுஜன பெரமுன 6 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தது. எனவே உப தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாகலிங்கம் யோகராசா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.