கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி : தொடரும் கொடூரங்கள்!!

347

தமிழகத்தில் பாடசாலை மாணவி ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் திமிரி அடுத்த ஒழலை கிராமத்தை சேர்ந்தவர் ராதா, இவரது மகள் சங்கீதா(17). இவர், அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அவரது தாய் ராதா இறந்து விட்டதால், தனது தந்தை டீக்காராமனுடன் தாழனூரில் வசித்து வந்தார் சங்கீதா. பாடசாலைக்கு தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளதால், சங்கீதா வீட்டில் இருந்தார். இந்நிலையில் தனது வங்கி புத்தக நகலை பள்ளியில் சமர்ப்பிக்க,நேற்று மதியம் ஒழலை சென்ற அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் பதற்றமடைந்த சங்கீதாவின் அண்ணன் நவீன், நேற்றிரவு முழுவதும் பல இடங்களில் அவரை தேடியுள்ளார். இந்நிலையில், இன்று காலை ஒழலையில் உள்ள ராதாவின் வீட்டிற்கு நவீன் சென்று பார்த்தபோது, அங்கு சங்கீதா கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து திமிரி பொலிசாருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், சங்கீதாவின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், சங்கீதாவின் கழுத்தை டயர் டியூப்பை கொண்டு இருக்கி கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.