இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டு தயாரிக்கும் பணி சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலத்திரனியல் கடவுச்சீட்டு தயாரிக்கும் பொறுப்பு De La Rue Lanka Currency and Security Print Ltd நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடு தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துமாறு உச்ச நீதிமன்றம், சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவுக்கு சொந்தமான நிறுவனத்திடம் 1.2 பில்லியன் ரூபாவுக்கு கடவுச்சீட்டு அச்சிடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து PIC Lanka Pvt Ltd நிறுவனம் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம் அந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
180 மில்லியன் செலவில் மிகவும் சிறந்த தரத்திலான இலத்திரனியல் கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு தாம் முன்வைத்த யோசனையை கருத்திற்கொள்ளாமல் குறித்த பிரித்தானியா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க அச்சிடல் திணைக்களம் இவ்வாறு கண்டுக்கொள்ளாமல் செயற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






