அவதானம் : 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை!!

529

தற்பொழுது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை நாளை குறைவடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நண்பகல் 12.00 மணிக்கு திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின்போது இந்த பகுதிகளில் தற்காலிகமாக கடும்காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.