வரதட்சணைக்காக கர்ப்பிணியை கதறக் கதறக் கொலை செய்த கணவன்!!

820

 

இந்தியா – தமிழ்நாடு, தஞ்சையில் கணவன் வரதட்சணை கேட்டு கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மானம்புசாவடி பகுதியை சேர்ந்தவர் 30 வயதான சுந்தரத்தின் மனைவி காயத்திரி கர்ப்பமாக இருந்த போது சுந்தரம் காயத்ரி வீட்டாரிடம் இருசக்கர வாகனம் வாங்கித் தரக் கோரியும், புதிதாக வீடு கட்ட பணம் வாங்கி வரும்படியும் காயத்ரியிடம் கேட்டு கொடுமை படுத்தியுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு சுந்தரத்துக்கும் – காயத்திரிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுந்தரம் காயத்ரியை தாக்கியுள்ளார். படுகாயமடைந்த காயத்ரி தஞ்சை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சுந்தரத்தை கைது செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.