மது போதையில் பஸ்ஸின் சில்லில் சிக்கிய நபர்!!

708

 

மஸ்கெலியா – நோட்டன் பிரதான வீதியில் சிவனொளிபாத மலைக்கு யாத்திரிகள் சென்ற பஸ்ஸின் சில்லில் சிக்குண்ட ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நோட்டன் பிரிட்ஜ் டெப்லோ பகுதியிலே நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காலியிலிருந்து சிவனொளிபதமலை சென்ற யாத்திரிகள் பஸ்ஸில் டெப்லோ பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஏற முற்பட்டுள்ளார். இதன்போது தவறி வீழ்ந்து பஸ்ஸின் சில்லில் சிக்குண்டு படுகாயமடைந்துள்ளதாகவும் இவர் தற்போது கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் மது போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், பஸ்ஸின் சாரதியை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.